நம் வீட்டு பெண்களை உயிரோடு விழுங்கும் நாடக காதல் – லவ் ஜிஹாத் மத பயங்கரவாதம்

நம் வீட்டு பெண்களை உயிரோடு விழுங்கும் நாடக காதல் – லவ் ஜிஹாத் மத பயங்கரவாதம்

Share it if you like it

காதல் திருமணம் என்பது நம்பிக்கை நல்லெண்ண அடிப்படையில் இரண்டு குடும்பங்களை இணைக்கும் உறவு பாலமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்த காதலும் திருமணமும் ஏதேனும் உள்நோக்கத்துடன் திட்டமிட்ட நாடக காதலாக இருப்பது சமூக சீரழிவையே தரும். .பெண்களை முன் நிறுத்தி மீண்டும் இந்த மண்ணையும் மக்களையும் ஆக்கிரமிக்கும் சதியாக இருப்பது அபாயமே. இந்த தேசத்தின் அரச குடும்பம் தொடங்கி சாமானியன் வரை மக்களின் உதிரம் கொண்டு எழுதப்பட்ட அந்த வரலாற்றின் கண்ணீர் பக்கங்களை இன்றைய சந்ததிகள் உணரச் செய்யாத வரை இது போன்ற கொடுமைகள் தொடரவே செய்யும். தாய் -தாய் பூமி -தாய் தர்மம் என்ற வரையறைக்கு உட்படாத நட்பும் -உறவும் நம்மை நாசமாக்கவே செய்யும் என்பதை நம் தலைமுறைகள் உணரச் செய்ய வேண்டும்.

மகாராஜா பிரித்விராஜ் சௌகான் முதல் மராட்டிய வீரசிவாஜி வரை உயிரை துச்சமாக்கி களம் கண்ட காரணத்தை, வரலாறாக படித்திருந்தால் நாம் எப்படி வாழ வேண்டும்? என்ற படிப்பினை நம் குழந்தைகளுக்கு கிடைத்திருக்கும். சித்தூர் ராணி பத்மாவதி தொடங்கி பல்லாயிரக்கணக்கான இராஜபுத்திர பெண்கள் ஜோஹர் என்னும் புனித அக்னி வளர்த்து தீயில் விழுந்து மாண்டு போனதன் பின்னணி என்ன? என்பதை வரலாற்றுப் புத்தகங்கள் வாயிலாக கல்விக்கூடங்களில் போதித்திருந்தால், நம்முடைய பெண்கள் தங்களின் கண்ணியம்,பாதுகாப்பு இரண்டிலும் சமரசம் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடே வளர்ந்திருப்பார்கள்.

இராஜபுதனம் தொடங்கி தென்மதுரை வரை நடந்த அந்நிய படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கான இந்துஸ்தான பெண்கள் அபகரிக்கப்பட்டு, திறந்தவெளி இரும்பு கூண்டுகளில் அடைத்து ஆப்கானிய மண்ணிற்கு கொண்டு போனதன் நோக்கமும் ,அங்கு அவர்களுக்கு நேர்ந்த கொடூரமும் பாடமாக படித்திருந்தால் , பெண்களுக்கு நம் எதிரில் நிற்பவன் மன்மதன் ஆயினும் என் சுயம் பறிக்க வந்த பாதகன் அவன் என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்கி இருந்திருக்கும்.

ராணி லக்ஷ்மி பாயும்- ராணி தாரா பாயும்- துர்காவாதிகளும் ஆயுதம் ஏந்தி களம் இறங்கியதும், பெண்கள் தங்களின் அங்கங்களுக்கு கூட முலை வரி செலுத்த வேண்டியிருந்த கொடூரத்தையும் படித்திருந்தால் இன்று பெண்ணியம் பேசுவோரின் பொய் முகமும் ,தம்மை சூழ்ந்து நிற்கும் கலாச்சார ஆக்கிரமிப்பு எவ்வளவு அபாயமானது? என்று உணர்ந்து தங்களை தற்காத்து கொண்டிருக்க முடியும்.

ஆழ்வார்கள்- நாயன்மார்கள்- இராஜமாதாக்கள் வரிசையில் இருந்த நம் நாட்டுப் பெண்கள் இடைக்காலத்தில் ஏன் நான்கு சுவர்களுக்குள் முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது? என்ற காரணத்தை சொல்லி வளர்த்திருந்தால் நம்முடைய பாதுகாப்பு விஷயத்தில் சமரசத்திற்கு இடம் தரக் கூடாது என்ற மன உறுதி இருந்திருக்கும். ஆனால் இதையெல்லாம் கற்பிக்க வேண்டிய கல்விக்கூடங்களும்- வரலாற்றுப் பாடங்களும், கொள்ளையடிக்க வந்தவனை நம்பிக்கை நாயகனாகவும் , அரசவையும் -ஆலயமும்- போர்க்களமும் தவிர்த்து வேறு எதையும் வேண்டாத உறுதி மிக்க அரசகுல பெண்களை ,திட்டமிட்டு ஆடம்பர மோகத்தில் அலங்கார ஆசையில் வீழ்த்த கலாச்சார சீரழிவிற்காகவே மினா பஜார் என்று கடை விரித்த கயவனை, சக்கரவர்த்தி என்று போதித்ததன் விளைவு, இன்று நம் சந்ததிகள் நம் கண் முன்னே கொடூரமாக பலியாகிக் கொண்டிருக்கிறது.

வியாபாரத்திற்கென்று வந்தவன் இங்கு நம்மை அடிமைப்படுத்தி நம் மண்ணையும்- பொன்னையும்- பெண்ணையும், களவாட வேண்டி செய்த கொடூரங்களை எல்லாம் மறைத்து, அவர்களை பிரபுக்களாகவும், கல்விக்கண் திறந்த மேதைகளாகவும் கற்பித்ததன் விளைவு, இன்று நம் சந்ததிகள் தன்னை சூழ்ந்திருக்கும் மதமாற்ற அபாயம் புரியாமல் புதை குழியில் விழுந்து கொண்டிருக்கிறது. சமத்துவம்- சகோதரத்துவம் என்பதெல்லாம் இரண்டாவது விஷயம். நம்முடைய சுயமும்- பாதுகாப்பும், நம் வீட்டுப் பெண்களின் கௌரவமுமே முதல் தேவை ! என்பதை நாமும் நம் சந்ததிகளும் உணர வேண்டும் எனில் பாரதத்தின் வரலாற்றில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட கடந்த கால இருண்ட பக்கங்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

கலாச்சார வாழ்க்கை பண்பாடு பாரம்பரியம் சார்ந்த நடைமுறையை பிற்போக்கு என்று பேசி ஆபாசம் போதை கலாச்சார சீரழிவை எல்லாம் முற்போக்கு தனிமனித. சுதந்திரம் என்று அடையாளப் படுத்தும் சூழ்ச்சி எல்லாம் நம்மை அழிக்க நம்மையே ஆயுதமாக்கும் தற்கொலை சதி என்பதை பெண்கள் உணர வேண்டும். ஹேப்பி ஸ்ட்ரீட் – காதலர் தின கொண்டாட்டம் என்ற சீரழிவிற்கு குரல் கொடுத்து ஆதரிக்கும் யாரும் நாளை நாம் பாதிக்கும் போது இருக்கும் இடம் தெரியாது என்ற உண்மையை உணர்ந்து பெண்கள் தங்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நட்பு – காதல் என்ற எதுவும் தங்களின் தற்காலிக சந்தோஷமாக இருந்தாலும் அதன் விளைவுகள் நம்மை தன்மான இழுக்கு உயிராபத்து என்ற அபாயத்தின் எல்லையில் நிறுத்தும் திட்டமிட்ட சதிகள் என்பதை உணர்ந்து குடும்பம் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை என்ற பாதுகாப்பு வளையத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டு கோள்.

வரலாறு கற்பிக்கும் படிப்பினைகளை உணராத தேசம், அதே வரலாற்றின் துயரங்களை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டி வரும்! என்ற நியதியின் சாட்சியமே சமீப காலமாக நம் கண் முன்னே நம் பெண் குழந்தைகள் நட்பு நல்லெண்ணம் என்ற பெயரில் அவர்களின் நம்பிக்கை பெற்று காதல் என்ற பெயரில் அவர்களை சிதைக்கும் கொடூரம். ஆள்பவர் வீடு முதல் ஆண்டியின் குடிசை வரை அனைத்து தரப்பையும் படித்த மேல் தட்டு பெண்கள் தொடங்கி சாமானிய அப்பாவி பெண்கள் வரை அனைவருக்கும் தன்மான இழுக்கு உயிர் ஆபத்துக்கள் விளைவிக்கும் இந்த மத பயங்கரவாத காதல் வலையில் இருந்து நம் பெண்கள் பாதுகாக்க பட வேண்டும்.


Share it if you like it