கையை வெட்டுவேன்: தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!

கையை வெட்டுவேன்: தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!

Share it if you like it

வீரமணி மீது யாராவது கைவைத்தால், அவர்களது கையை வெட்டுவேன் என்று தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு திமிராக பேசியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் மதுரையில் திறந்தவெளி மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் பேசிய தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, ‘‘சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சியை பெற்றிருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்னரே சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி இருக்க வேண்டும். குழந்தை ஊனமாக்கப்பட்டது போல சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆதாம் பாலம் வழியாகவே சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, சேது சமுத்திரத் திட்டத்தை காலதாமதம் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார்.

அருண் ஜெட்லி, நிதீஷ் குமார், கோயல், ஜார்ஜ் பெர்னாண்டாஸ் உள்ளிட்டவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சேது சமுத்திரத் திட்டம் 23 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 23 கிலோ மீட்டர் தொலைவு பணிகள் முடிக்கப்பட வேண்டும். சேது சமுத்திரத் திட்டப் பாதையில் எந்தவொரு கட்டங்களும் இல்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. சேது சமுத்திரத் திட்டம் குறித்து அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வருவதற்கு 6 மாவட்டங்களில் 2 ஆண்டுகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ராமர் பாலம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தில் மத சாயம் பூசக் கூடாது. ராமர் பாலம் விவகாரத்தில் நாசா வெளியிட்ட புகைப்படம் உண்மை.

நான் எப்போதும் முரடான இருப்பேன் என்றால், தவறு நடக்கும்போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்களால் திருப்பி அடிக்க முடியாது, உங்களுக்கு பலமில்லை. நான் திருப்பி அடிப்பேன். என் கட்சித் தலைவரை திட்டினால், தீண்டினால், அய்யாவை (வீரமணியை) அடிக்க எவனாவது வந்தால் நான் கையை வெட்டுவேன். கையை வெட்டுவது நியாயம். நீங்கள் இல்லை எனலாம். அதை கோர்ட்டில் போய் சொல்லுங்க. நான் பேசுவதை, நீங்கள் பார்ப்பதை பார்த்தால், நாளேயே தலைவரிடம் சொல்லிக் கொடுத்து விடுவீர்கள் போல. ‘நாவடக்கம் வேண்டும்’ என்று நாளை தானே சொல்லுவீங்க. இப்போ சொல்ல மாட்டீங்களே?’’ என்று திமிராக பேசியிருக்கிறார்.

பாலுவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறு. இதைப்பார்த்துவிட்டு தி.மு.க.வினரின் நாகரிகம் இதுதான். எல்லோரும் ரவுடி கூட்டத்தைச் சேர்ந்தவர். பாலு ஒரு முன்னாள் சாராய வியாபாரி. இப்போது மதுபான வியாபாரி. அவரது வார்த்தையிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். அதேபோல, சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும், அரசியல் பார்வையாளர்களும் பாலுவின் பேச்சுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


Share it if you like it