மதுரை ரயில் தீ விபத்து 5-பேர் கைது!

மதுரை ரயில் தீ விபத்து 5-பேர் கைது!

Share it if you like it

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து திரும்பி சென்று கொண்டிருந்த வேளையில் மதுரை அருகே தீப்பற்றி எரிந்தது. இதில் பெரும் விபத்து நிகழ்ந்தது. இதில் 9- பேர் உயிரிழந்தனர். ரயிலில் சமையல் சிலிண்டர் பயன்படுத்திய போது பரவிய தீயே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்த லக்னேவை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தை சேர்ந்த 5- பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Share it if you like it