முஸ்லீம் பெண் மீது காதல்: தலித் வாலிபர் ஆணவக்கொலை!

முஸ்லீம் பெண் மீது காதல்: தலித் வாலிபர் ஆணவக்கொலை!

Share it if you like it

மகாராஷ்டிராவில் முஸ்லீம் பெண்ணை காதலித்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை, அப்பெண்ணின் குடும்பத்தினர் ஆணவக்கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் ஆங்காங்கே ஆணவக்கொலைகள் அரங்கேறி வருகிறது. எனினும், தமிழகத்தில் இது சற்று அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், உயர் ஜாதி பெண்களை காதலித்து திருமணம் செய்யும்போது, இக்கொலைகள் அரங்கேறி வருகிறது. அதேபோல, உயர் ஜாதி பெண்கள், மாற்று ஜாதியைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்யும்போதும், இதுபோன்ற ஆணவக் கொலைகள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஆயுஷி என்கிற 22 வயது இளம்பெண், வேறு ஜாதியைச் சேர்ந்த நபரை காதலித்ததால், பெற்ற தந்தையே அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், மகாராஷ்டிராவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த பட்டியல் சமூக வாலிபர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னில். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அஸ்மா என்கிற பெண்ணை காதலித்து வந்திருக்கிரார். ஆனால், இவர்களது காதலுக்கு அஸ்மாவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, ஸ்வப்னில்லும், அஸ்மாவும் பெற்றோரை எதிர்த்து திருணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இந்த விஷயம் அஸ்மாவின் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. உடனே, அப்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் சேர்ந்து, ஸ்வப்னிலை கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்து விட்டனர். இச்சம்பவம் நான்டெட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it