தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார் – மணி ஓபன் டாக்!

தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார் – மணி ஓபன் டாக்!

Share it if you like it

2022 -ஆம் ஆண்டு தமிழகத்தில் செல்வாக்கு கூடிய அரசியல் தலைவர்களில் திருவண்ணாமலை மிக முக்கியமானவர் என மூத்த பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் மணி. இவர், திராவிட முன்னேற்ற கழகத்தினருடன் மிகவும் நெருக்கமானவர். பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்டவர். அதேவேளையில், பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என தி.மு.க.விற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க கூடியவர் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், ஓன் இந்தியா இணையதள ஊடகத்திற்கு இவர் அளித்த பேட்டியில்,

இந்தியாவை ஆள கூடிய ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலையை. ஆயிரம்தான், நாம் அவரை விமர்சனம் செய்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அண்ணாமலை இன்று ஒரு போன் செய்தால், டி.ஜி.பியோ, தலைமை செயலாளரோ, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என அனைவரும் உடனே அவருக்கு பதில் அளித்துதான் ஆக வேண்டும்.

அண்ணாமலை ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் அதனை ஆளும் கட்சியால் புறம்தள்ள முடியவில்லை. அவர், என்ன சொல்கிறார் என்பதை ஆளும் தரப்பு மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. இந்த அரசு ஒருவரின் பேச்சை தீவிரமாக கவனிக்கிறது என்றால் அது அண்ணாமலையாக தான் இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it