மணிப்பூர் மக்கள் மீது ராகுலுக்கு திடீரென ஏன் அக்கறை வருது? காரணம் தேர்தல் வருது; நாம் தமிழர் சீமான் சுளீர்!

மணிப்பூர் மக்கள் மீது ராகுலுக்கு திடீரென ஏன் அக்கறை வருது? காரணம் தேர்தல் வருது; நாம் தமிழர் சீமான் சுளீர்!

Share it if you like it

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு திடீரென ஏன் அக்கறை வருகிறது. காரணம் தேர்தல் வருகிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியிருக்கிறார்.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்திருக்கிறது. இதையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி, பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்தார். தற்போது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மணிப்பூர் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், இந்தியா கூட்டணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் தொடர்பாகவும், ராகுல் காந்தி பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிளித்த சீமான், “இதே மணிப்பூரில்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இரோம் ஷர்மிளா 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தார். 12 பெண்கள் நிர்வாண நின்று, இந்திய ராணுவம் எங்களை கற்பழிக்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதெல்லாம் யார் ஆட்சியில். காங்கிரஸ் ஆட்சியில்தானே… அப்படி இருக்க இப்போது மட்டும் என்ன ராகுல் காந்திக்கு மணிப்பூர் மக்கள் திடீரென அக்கறை வருது. காரணம் தேர்தல் வருது” என்று சுளீரென கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it