புலி வேஷம் போட்ட நாய்… இந்தியா கூட்டணியை பங்கம் செய்த அண்ணாமலை!

புலி வேஷம் போட்ட நாய்… இந்தியா கூட்டணியை பங்கம் செய்த அண்ணாமலை!

Share it if you like it

இந்தியா கூட்டணி என்பது புலி வேஷம் போட்ட நாய் என்று சொல்லி மரண பங்கம் செய்திருக்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளை எல்லாம் இணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்கிற பெயர் வைத்தது. அதேபோல, பாரதிய ஜனதா கட்சி தனது கூட்டணிக் கட்சிகளை எல்லாம் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயர் வைத்துக் கொண்டது. இந்த சூழலில், காங்கிரஸ் கூட்டணியில் சில புதிய கட்சிகளும் இணைந்தன. இக்கூட்டணிக் கட்சிகளில் 2-வது சுற்று கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமீபத்தில் நடந்தது. அப்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்கிற பெயரை மாற்றி இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி பெயர் குறித்து செய்தியாளர்கள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஒரு நாய் புலியாக மாற நினைத்தது. இதற்கு தனது நண்பரிடம் ஐடியா கேட்டது. அதற்கு அந்த நண்பர், நீ புலி மாதிரி உடல் முழுவதும் கோடு போட்டுக்கொள் என்று சொன்னார். உடனே, நாயும் கோடு போட்டுக் கொண்டு நான்தான் புலி என்று கூறியது. அப்படித்தான் இருக்கிறது இந்தியா என்று பெயர் வைத்திருப்பதும். இந்தியா என்பது புலி வேஷம் போட்ட நாய் போன்றது” என்று சொல்லி மரண பங்கம் செய்திருக்கிறார்.


Share it if you like it