தமிழகத்தில் தொடரும் ‘லவ் ஜிகாத்’: 17 வயது ஹிந்து சிறுமி கூட்டு பலாத்காரம்!

தமிழகத்தில் தொடரும் ‘லவ் ஜிகாத்’: 17 வயது ஹிந்து சிறுமி கூட்டு பலாத்காரம்!

Share it if you like it

தமிழகத்தில் லவ் ஜிகாத் தொடர்கதையாகி வருகிறது. காதலிப்பதாகக் கூறி 17 வயது ஹிந்து சிறுமியை கடத்திச் சென்று, போதை ஊசி செலுத்தி இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததால், அச்சிறுமி உயிரிழந்திருக்கும் சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் மகள் துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது சிறுமியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த மதீனா பேகம் மகன் நாகூர் ஹனிபா என்பவர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். இதற்கு, துர்காவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியில் சென்ற துர்கா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் தேடியும் துர்கா கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த துர்காவின் தாய், மகளை காணவில்லை என்றும், அதே ஊரைச் சேர்ந்த மதீனா மற்றும் அவரது மகன் நாகூர் ஹனிபா ஆகியோர் கடத்திச் சென்று விட்டதாகவும் பிப்ரவரி 15-ம் தேதி காலையில் மேலூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, பிப்ரவரி 22-ம் தேதி மதுரை எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். இதன் பிறகே, மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதுவும், சிறுமி மிஸ்ஸிங் என்பதுபோல மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி நள்ளிரவு துர்காவின் வீட்டுக்கு வந்த நாகூர் ஹனிபாவின் தாய் மதீனா, துர்கா சீரியஸாக இருப்பதாகவும், வந்து அழைத்துச் செல்லும்படியும் அவரது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், துர்காவின் தாயார் பதறியடித்துக் கொண்டு புறப்படவே, அவரது வீட்டு வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றிருக்கிறது. அதிலிருந்து இறங்கிய சிலர், குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த துர்காவை, அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இதனால் பதட்டமடைந்த துர்காவின் தாய், ஒரு ஆட்டோவை பிடித்து துர்காவை ஏற்றிக்கொண்டு மேலூர் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். ஆனால், துர்காவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கவே, அவரை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட போலீஸார், நாகூர் ஹனிபா, ராஜா முகமது, சாகுல் ஹமீது, மதினா பேகம், ரம்ஜான் பேகம், மற்றொரு ராஜா முகமது மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ், பெருமாள் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து துர்காவின் உறவினர்களிடம் பேசியபோது, “மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் லவ் ஜிகாத் என்கிற பெயரில் ஹிந்து சிறுமிகளை காதலிப்பதுபோல நடித்து, அவர்களை வசப்படுத்தி, போதைக்கு உட்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும், போலீஸாரோ, ஆட்சியாளர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சூழலில்தான் துர்காவுக்கும் லவ் ஜிகாத் என்கிற காதல் வலையை வீசி இருக்கிறார்கள். இதில் வீழ்ந்து விட்ட துர்காவை, கடந்த மாதம் 14-ம் தேதி கடத்திச் சென்று, போதை ஊசி செலுத்தி, 7, 8 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதனால், உடல் ரிதீயாக பாதிக்கப்பட்ட துர்காவை, குற்றுயிரும், குலையுயிருமாக கொண்டு வந்து, அவரது தாயார் வீட்டு முன்பு வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆகவே, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு, ஹிந்து சிறுமிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும்” என்றார்கள்.

இதனிடையே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி துர்கா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. சிறுமிக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். துர்காவின் குடும்பத்துக்கு பக்கபலமாக வி.ஹெச்.பி., ஹிந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளும் களத்தில் குதித்திருக்கின்றன.

/

/https://www.facebook.com/padmadhas.thuckalay/videos/988045475450311/


Share it if you like it

One thought on “தமிழகத்தில் தொடரும் ‘லவ் ஜிகாத்’: 17 வயது ஹிந்து சிறுமி கூட்டு பலாத்காரம்!

  1. தவரு யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்

Comments are closed.