கோவை 107 வயது பாட்டியிடம் ஆசி வாங்கிய மோடி!

கோவை 107 வயது பாட்டியிடம் ஆசி வாங்கிய மோடி!

Share it if you like it

கோவை மாவட்டத்தை சேர்ந்த பாப்பம்மாளிடம் ஆசி வாங்கிய பாரதப் பிரதமர் மோடி.

சர்வதேச சிறுதானியங்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த பாப்பம்மாள் கலந்து கொண்டார். இதையடுத்து, பாப்பம்மாள் பாட்டி பாரதப் பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் அவரிடம் ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it