மறக்கமுடியாத வரலாற்று சிறப்புமிக்க நாள்

மறக்கமுடியாத வரலாற்று சிறப்புமிக்க நாள்

Share it if you like it

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத் தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து மாநிலங்க ளவையில் பேசிய பிரதமர் நரேந்ததிர மோடி “இன்றைய நாள் மறக்க முடியாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. என்றும் இன்று நாம் பெண்கள் அதிகாரமளிக்கும் நோக்கில் ஒரு முக்கியமான அடி எடுத்து வைக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். ஜி 20 மாநாட்டின் போது, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கூட்டங்கள் நடந்தன என்றும் ஒவ்வொரு மாநிலமும் மிகுந்த ஆர்வத்துடன், விருந்தோம்பல் மூலம் உலகைக் கவர்ந்தன என குறிப்பிட்ட பிரதமர் இது நமது கூட்டாட்சிக் கட்டமைப்பின் சக்தி என்றும் பெருமிதம் தெரிவித்தார்.


Share it if you like it