கொரிய பெண் மானபங்கம்:  மொபீன், முகமது கைது!

கொரிய பெண் மானபங்கம்: மொபீன், முகமது கைது!

Share it if you like it

பெண் யூ டியூப்பருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்து இருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த பெண் டியூப்பர், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் லைவ் வீடியோவில் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மொபீன் சந்த் மற்றும் முகமது நகீப் இருவரும் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கின்றனர்.

இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பேசுப் பொருளாக மாறி இருந்தது. இந்தியாவிற்கு, வந்த வெளிநாட்டு விருந்தாளியை இழிவுப்படுத்திய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, மொபீன் மற்றும் முகமது நகீப் இருவரையும் மும்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it