அட்டகத்தி இயக்குனர் மீது தடா பெரியசாமி பாய்ச்சல்!

அட்டகத்தி இயக்குனர் மீது தடா பெரியசாமி பாய்ச்சல்!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தடா பெரியசாமி தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ.க. எஸ்.சி. அணி மாநில தலைவரான தடா பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

பா.ரஞ்சித் நீங்க கூட திரைப்பட இயக்குனர் வேலையை பார்க்காமல் அரசியல் செய்றீங்க என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தியாவில் கருத்துச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அது ஆளுநராக இருந்தாலும் சரி அல்லது திரைப்பட இயக்குனராக இருந்தாலும் சரி.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், அவர் பேசவே கூடாது என்பது எத்தகைய ஜனநாயக உரிமை? இத்தகைய மனநிலையில் நீங்கள் எல்லாம் எப்படி தலித் விடுதலையை பற்றி பேசுகிறீர்கள்? பட்டியல் சமுதாய மக்களின் பஞ்சமி நிலம் மீட்கப்படாமல் இருப்பதை பற்றி என்றைக்காவது வாய் திறந்ததுண்டா? கடந்த நிதியாண்டில் ரூ.16,442 கோடி மத்திய அரசாங்கம் ஒதுக்கியதில் 10,466 கோடி ரூபாய் பட்டியல் சமுதாய நிதியை செலவு செய்யாமல் துரோகம் செய்திருக்கும் தி.மு.க. அரசை எதிர்த்து என்றைக்காவது கேள்வி எழுப்பியதுண்டா? 100 நாட்களைக் கடந்தும் வேங்கவயல் நீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டுபிடிக்காமல், சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் பட்டியல் சமுதாயத்திற்கு அநீதி இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து வாய் திறந்ததுண்டா?

இது போன்ற மக்கள் பிரச்சனையில் கேள்வி எழுப்பாமல் ஆளுநருக்கு எதிராக திசைதிருப்பும் வேலையை தம்பி பா. ரஞ்சித் போன்றவர்கள் செய்வது வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் நீங்க கூட திரைப்பட இயக்குனர் வேலையை பார்க்காமல் அரசியல் செய்றீங்க என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தியாவில் கருத்துச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அது ஆளுநராக இருந்தாலும் சரி அல்லது திரைப்பட இயக்குனராக இருந்தாலும் சரி


Share it if you like it