தயாநிதி மாறனுக்கு தரமான பதிலடி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி!

தயாநிதி மாறனுக்கு தரமான பதிலடி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி!

Share it if you like it

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்திய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது கேள்வி நேரம் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், “சமீபத்தில் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வழித்தடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனைத்து நிலங்களும் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், உங்களது ஒப்பந்ததாரர்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி நீதிமன்றத்திற்கு சென்று காலம் தாழ்த்தி வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. 100 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே, கிட்டத்தட்ட நான்கரை மணி நேரமாகிறது. மேலும், சாலை சிதிலமடைந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. வழக்கம்போல் இது எங்கள் தவறு அல்ல, ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வேலை தாமதமாக நடைபெறுகிறது என்று ஒன்றிய அரசு கூறுமா? இது என்ன மாதிரியான செயல்முறை? இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? ஒரு சாமானியன் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ஒன்றிய அரசும், ஒப்பந்ததாரர்களும் இணக்கமான முடிவுக்கு வரமுடியாத காரணத்திற்காக தமிழ்நாடு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே இந்த திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவுபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதற்குத்தான் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. தயாநிதி மாறனின் கேள்விகளுக்கு பதிலளித்து நிதின் கட்கரி பேசுகையில், “சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை, நானும் நேரில் சென்று பார்த்தேன். பிரச்னை என்னிடமோ, எனது துறையிடமோ இல்லை. நீங்கள்தான் ஒத்துழைப்புத் தரவேண்டும். கட்டுமானப் பொருட்கள் இல்லாத நிலை நிலவுகிறது. சில சமயங்களில் 3 மாதத்துக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறீர்கள். 3 மாதத்துக்கு பிறகு மீண்டும் அனுமதி கோர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது எவ்வளவு கடினமானது தெரியுமா? அங்கு நிலம் கையகப்படுத்த முடியவில்லை. ஆகவே, குழிதோண்ட அனுமதி இல்லை. எல்லாவற்றும் மேலாக, சுற்றுச்சூழல் அனுமதி இல்லை, வனத்துறை அனுமதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி வேலையை விரைந்து பார்க்க முடியும்.

அதேசமயம், தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் பெங்களூரு நெடுஞ்சாலைப் பணிகள் மிகவும் துரிதமாகவும், நன்றாகவும் நடந்து வருகிறது. நாங்கள் தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். இதுகுறித்து பலமுறை தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கிறேன். தமிழக முதல்வரிடமும் பலமுறை தகவல்களை பரிமாறி இருக்கிறேன். நிலம் இல்லாமல், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எப்படி சாலையை விரைந்து அமைக்க முடியும். சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலைப் பணிகளை இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்படி முடித்தால் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆகவே, உங்களது ஒத்துழைப்பு எங்களுக்குக் கிடைத்தால் 100 சதவிகிதம் பணிகள் நிறைவடையும்” என்று தமிழக அரசின் திறமற்ற நிர்வாகத்தை தோலுரித்து விட்டார். இதன் பிறகு தயாநிதி மாறனின் முகத்தில் ஈயாடவில்லை.


Share it if you like it