ஆதாரில் சாத்தான் உள்ளது:  ஆண்டவர் தம்மிடம் கூறினார் பாதிரியார் பகீர் தகவல்!

ஆதாரில் சாத்தான் உள்ளது: ஆண்டவர் தம்மிடம் கூறினார் பாதிரியார் பகீர் தகவல்!

Share it if you like it

ஆதாரில் சாத்தன் உள்ளது என கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி ஒன்று பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரூப் சர்ச் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாதிரியார் ஒருவர் இவ்வாறு பேசினார் ;

ஏசுபிரான் எனக்கு அண்மையில் வரம் ஒன்றினை கொடுத்தார். அது என்னவென்றால், ஆவிகளை பகுத்தறியும் வரம்தான் அது. கடந்த 2010 – ஆம் ஆண்டிலிருந்தே இந்த வரம் என்னுள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 2013 – ஆம் ஆண்டிலிருந்துதான் நான் அதனை உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் ஆவியின் செயல்பாடுகள் குறித்து என்னிடம் ( ஆண்டவர் ) பேசுவார். ஆதார் அட்டை மற்றும் பணமதிப்பிழப்பு வந்தபோது இது பேலேத் என்ற ஆவியின் செயல்பாடுதான் இது என ஏசுபிரான் என்னிடம் கூறினார்.

இந்த ஆவி எல்லாரையும் கண்காணித்தால்தான் தனது அதிகாரத்தை அனைவர் மீதும் செலுத்த முடியும் என்று கூறினார். இந்த, ஆவி கல்வி முறையில், பண பரிமாற்றத்தில், வியாபாரத்தில் புகுந்து விட்டது. இதன் நோக்கம் அனைத்தும் தனது எண்ணப்படி செயல்பட வேண்டும் என அந்த ஆவி தீர்மானித்து விட்டதாக அந்த பாதிரியார் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it