15 வயது ஹிந்து சிறுமி பலாத்காரம்: நாஜிம், ஜாவித் கைது!

15 வயது ஹிந்து சிறுமி பலாத்காரம்: நாஜிம், ஜாவித் கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் 15 வயது ஹிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, நாஜிம், ஜாவித் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இக்குடும்பத்தில் 15 சிறுமி ஒருவரும் அடக்கம். இந்த சூழலில், தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாயுடன் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் அச்சிறுமி. அப்போது, ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் வந்த 2 இளைஞர்கள், அச்சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது, அந்த சிறுமி வீட்டில் கோவித்துக் கொண்டு வந்த விஷயம் தெரிந்தது.

இதையடுத்து, அந்த சிறுமிக்கு உதவி செய்வதுபோல நடித்த இருவரும், பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அச்சிறுமியை ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், ஊரின் ஒதுக்குப் புறமான இடத்தில் அமைந்திருந்த புதிய கட்டடத்திற்கு அழைத்துச் சென்று, அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பின்னர், இரவு 10 மணியளவில் அச்சிறுமியை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்து டெல்லி செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

ஆனால், கையில் சுத்தமாக காசு இல்லாததால், அச்சிறுமியை ராஜநகர் விஸ்தரிப்பு பகுதியான மேம்பட்ட நிலை தொலைத்தொடர்பு பயிற்சி மையம் (ஏ.எல்.டி.டி.சி.) சந்திப்பில் பஸ் கண்டக்டர் இறக்கி விட்டு விட்டார். இதனால், அச்சிறுமி செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த ரோந்து போலீஸார் சிறுமியிடம் விசாரித்திருக்கிறார்கள். சிறுமியும் தான் வீட்டில் கோவித்துக் கொண்டு வந்த விஷயத்தையும், 2 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தையும் கூறியிருக்கிறார்.

இதன் பிறகு, அச்சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்த போலீஸார், அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தார். மேலும், அச்சிறுமியின் பெற்றோரிடம் புகாரை பெற்று, பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அதோடு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது அதே பகுதியைச் சேர்ந்த நாஜிம், ஜாவித் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், முராத்நகர் ரயில்வே சாலை அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நாஜிம், ஜாவித் ஆகியோரை கைது செய்த போலீஸார், லோக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை கடத்திச் சென்ற ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். உ.பி.யில் ஹிந்து பட்டியலின சிறுமிகளுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தொடர் பாலியல் தொல்லை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it