நடவடிக்கை எடுக்காத திமுக அரசை எதிர்த்து மக்கள் சாலை மறியல் !

நடவடிக்கை எடுக்காத திமுக அரசை எதிர்த்து மக்கள் சாலை மறியல் !

Share it if you like it

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.மழை நின்றதையடுத்து பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. இருப்பினும் சென்னையின் சில பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அங்கு வசிக்கின்ற மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சேத்துப்பட்டு, பெரம்பூர்,கோடம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Share it if you like it