PFI அமைப்புக்கு தடை-உ.பி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை!

PFI அமைப்புக்கு தடை-உ.பி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தீவிரமாக பங்கேற்று வன்முறையை தூண்டியதாக உத்திரபிரதேச காவல்துறை மாநில உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.இந்த போராட்டம் தொடர்பாக இந்த அமைப்பை சார்ந்த 22 பேரை கைது செய்துள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உள்ள சிலர் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்தவர்கள் எனக்கூறிய உத்திரபிரதேச காவல்துறை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசை கேட்டு கொண்டுள்ளது.இதன் அடிப்படையில் உத்தரபிரதேச அரசு மத்திய அரசுடன் விரைவில் அந்த அமைப்பை தடை செய்ய கோரும் எனக்கூறப்படுகிறது.


Share it if you like it