‘ஆயுஷ்மான் பாரத் 2.0’: நடுத்தர மக்களுக்கு மோடி அரசின் 2-வது பரிசு!

‘ஆயுஷ்மான் பாரத் 2.0’: நடுத்தர மக்களுக்கு மோடி அரசின் 2-வது பரிசு!

Share it if you like it

நடுத்தர மக்களுக்கு வருமான வரிவிலக்கு அளித்த மோடி அரசு, அடுத்ததாக மருத்துவ செலவுகளை குறைக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் 2.0 என்கிற திட்டத்தை அமல்படுத்தி நடுத்தர மக்களுக்கு 2-வது பரிசை அளிக்கவிருக்கிறது என்பதுதான் ஹைலைட்!

பாரத பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அனைவருக்கும் வீடு, வீடுதோறும் கழிப்பறை, வீட்டுக்கு வீடு குடிநீர், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், விவசாயிகளுக்கான கிசான் யோஜனா திட்டம், இலவச சிகிச்சை பெற ஆயுஷ்மான் பாரத் என பல்வேறு திட்டங்களை ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக மோடி அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான், நடுத்தரக் குடும்பங்களுக்கு புதிய திட்டம் ஒன்றை பரிசாக வழங்க மத்திய மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்குப் பெயர் ஆயுஷ்மான் பாரத் 2.0 என்பதாகும். இத்திட்டத்தின் மூலம், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (மிடிள் கிளாஸ் குடும்பங்கள்) காப்பீடு வசதி வழங்கப்படும். இதன் மூலம், நாட்டின் சுமார் 40 கோடி மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதாவது, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வழியில் ‘ஆயுஷ்மான் பாரத் 2.0’ செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான செலவுகள் மற்றும் சவால்களை மனதில் வைத்து இத்திட்டம் பல்வேறு வகைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், வருமான வரியில் நடுத்தர மக்களுக்கு மத்திய மோடி அரசு அளித்த நிவாரணத்துக்குப் பிறகு, 2-வது பெரிய பரிசாக இது அமையும். இத்திட்டத்தின் மூலம், வரி செலுத்தும் சம்பள வர்க்கத்திற்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.

புதிய ‘ஆயுஷ்மான் பாரத் 2.0’ திட்டத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தை தனிநபர் டாப் அப் அடிப்படையில் கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதேசமயம், சுகாதார காப்பீட்டு நிறுவனம் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் அடிப்படை சுகாதார பாதுகாப்பை வழங்குவது குறித்த மற்றொரு முறையும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it