இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட மத்திய அரசு திட் டமிட்டுள்ளதாகவும் இதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னேட்டமாக ஜி. 20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் சார்பில் அளிக்கப்டும் விருந்துகளுக்கான அழைப்பிதழில் ‘PRESIDENT OF BHARAT’ என அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.