தலைவாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் பாரதப் பிரதமர் மோடி டுவிட் ..!

தலைவாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் பாரதப் பிரதமர் மோடி டுவிட் ..!

Share it if you like it

சூப்பர் ஸ்டார் அடைமொழிக்கு சொந்தக்காரான ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே   பத்ம பூஷண், பத்ம விபூஷண், உள்ளிட்ட உயரிய விருதுகளை மத்திய அரசு ரஜினி அவர்களுக்கு வழங்கி கெளரவப்படுத்தி இருந்தது.

கோவாவில் 2019 – ஆம் ஆண்டு நடைப்பெற்ற., 50-வது சர்வதேச திரைப்பட விழா  விழாவில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறப்பு நட்சத்திர விருது ( Icon of Golden Jubliee) வழங்கி பெருமைப்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து 51-வது தாதா சாகேப் பால்கே விருதுக்கு சூப்பர் ஸ்டார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பினை அடுத்து பல அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

“பல தலைமுறைகளிடையே பிரபலமாக, ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 


Share it if you like it