இந்தியாவை இழிவுபடுத்துவதா? ராகுல் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்: இந்து முன்னணி!

இந்தியாவை இழிவுபடுத்துவதா? ராகுல் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்: இந்து முன்னணி!

Share it if you like it

இந்திய திருநாட்டை இழிவுபடுத்திய ராகுல் காந்தி ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், குஜராத்தின் மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தி சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவை இழிவுபடுத்தி பேசி இருக்கிறார். பா.ஜ.க.வை இழிவுபடுத்துவதாக நினைத்துப் பேசினாரா அல்லது இத்தாலி, தாய்லாந்து மற்றும் மேற்குலக நாடுகளின் மீதுள்ள பாசத்தால் பேசினாரா என்று தெரியவில்லை, இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் உதவியற்று சிரமப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

ஷாபானு வழக்கில் அவரது தந்தை ராஜிவ் காந்தி இஸ்லாமிய பெண்களுக்கு இழைத்த அநீதி பற்றி ராகுல் காந்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ராகுல் காந்தி இன்னமும் சிறுகுழந்தை போல் செயல்படுகிறார். மேலும், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாகக் கூறியுள்ள ராகுல் காந்தியே, டெல்லியில் சீக்கிய இனமே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சீக்கிய மக்களை கொடூரமாக காங்கிரஸ் கட்சி கொலை செய்தது உலகத்திற்கே தெரியும். இதை மறந்துவிட்டு, 1980-ல் இந்தியாவில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ, அது இன்று முஸ்லீம்களுக்கு நடக்கிறது என்று ஒரு கொடூர மனநிலையோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்திய மக்கள் ஒவ்வொரும் செயல்படுவதுபோல் பேசியிருப்பது வன்மத்திலும் வன்மம்.

அதோடு, 1980-ல் காங்கிரஸ் கட்சி, அதுவும் தங்களுடைய பாட்டி இந்திரா காந்திதான் ஆட்சியில் இருந்தார் என்பதை வசதியாக மறந்து விட்டார். ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தாய் நாட்டையும், தாய் மொழியையும் இழிவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில்கூட, இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி, நமது இந்திய திருநாட்டை பற்றி இழிவுபடுத்தி பேசினார். இதேநிலை தொடர்ந்தால், 2024 தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர். எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தி தொடர்ந்து இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசி வருவதால், நீதிமன்றமானது தாமாக முன்வந்து அவதூறு வழக்கில் ராகுல் காந்தி பெற்றுள்ள ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it