ராகுல் காந்தியை பப்பு என்று அழைக்காதீர்கள் என அவரது சகோதரி பிரியங்கா காந்தி பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவரது, சகோதி பிரியங்கா காந்தி. இவர், அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருக்கும் போது இவ்வாறு கூறினார் :
ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை ராகுல் காந்தி முடித்துள்ளார். அவரை, ‘பப்பு’ என்று அழைக்கின்றனர். அவர் ‘பப்பு’ அல்ல. அவர் நேர்மையானவர் மற்றும் சாமானியர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் நபர் என பிரியங்கா உருக்கமாக பேசியுள்ளார்.