ஆபாச வார்த்தை… கொலை மிரட்டல்… தி.மு.க. சேர்மனின் அடாவடி!

ஆபாச வார்த்தை… கொலை மிரட்டல்… தி.மு.க. சேர்மனின் அடாவடி!

Share it if you like it

தி.மு.க. நிர்வாகி ஒருவரை, அதே கட்சியைச் சேர்ந்த சேர்மன் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருப்பவர் வடிவேலு. நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனாகவும் இவர் இருக்கிறார். இந்த சூழலில், யூனியன் மூலம் விடப்படும் டெண்டர்கள் அனைத்தையும் வடிவேலுவே எடுத்துக் கொள்வதாகவும், கட்சிக்காரர்கள் யாருக்கும் டெண்டர் கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் வடிவேலு மீது கடும் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலுப்பை தண்டலம் பகுதியின் தி.மு.க. நிர்வாகியான பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவர், லோக்கல் தி.மு.க.வினரின் வாட்ஸ் ஆப் குழுவில் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதாவது, தி.மு.க. சார்பாக வரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவர்களுக்குச் சொந்தம். தி.மு.க.வுக்காக 1960 முதல் 2023 வரை ஒட்டளித்த எங்களுக்கு திருப்பதி திருமலை சார்பில் லட்டு… இந்த லட்சு எத்தனை காலம் வரும் என்று நாங்களும் ஒரு காலம் பார்க்கிறோம்.

எங்களுக்கும் திருப்பதியில் இருந்து வெகுசீக்கிரத்தில் லட்டு வரும்… கிடைக்கும் என்று பதிவிட்டு, இது தி.மு.க. தலைமைக்கு சென்றடையும் வரை அதிகளவில் பகிருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த வடிவேலு, கோகுல்நாத்தின் செல்போனுக்கு போனை போட்டு, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோகுல்நாத் எதிர்பார்த்தபடி தி.மு.க. தலைமைக்கும் சென்று சேர்ந்து விட்டது.

தலைமை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!


Share it if you like it