ரயில் கட்டணம் குறைப்பு : மகிழ்ச்சியில் மக்கள் !

ரயில் கட்டணம் குறைப்பு : மகிழ்ச்சியில் மக்கள் !

Share it if you like it

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கொடிய கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால், அப்போது சாதாரண பயணிகள் இரயில் எக்ஸ்பிரஸ் இரயில்களாக மாற்றப்பட்டது. மேலும், கட்டணம் சிறிது உயர்த்தப்பட்டது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளாக சாதாரண இரயிலில் பயணித்தாலும் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்களை கொண்ட இரயில்களில், 200 கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்திற்கு இயக்கப்படும் இரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இரயில் கட்டணம் பாதியாக குறைந்துள்ளது. இதனால், இரயில் பயணம் மேற்கொள்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share it if you like it