மாணவர்களை மூளை சலவை செய்த பள்ளி ஆசிரியை: பெருமையோடு கூறிய மோகன் சி லாசரஸ்..!

மாணவர்களை மூளை சலவை செய்த பள்ளி ஆசிரியை: பெருமையோடு கூறிய மோகன் சி லாசரஸ்..!

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, கிறிஸ்தவ பள்ளி ஆசிரியை ஒருவர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை அவர் எப்படி? ஏசுவை ஏற்றுக் கொள்ள செய்தார். அதாவது., மாணவர்களை மூளை சலவை செய்து. மதம் மாற்றியது எப்படி என்று மதபோதகர் மோகன் சி லாசரஸ் பெருமையோடு பேசிய காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மோகன் சி லாசரஸ். இவர் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், போன்றவற்றை இழிவுப்படுத்தி பேசி வருவதை வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ சபை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, உரையாற்றிய மோகன் சி லாசரஸ். உங்கள் சபைக்கு ஆயிரம் ஆத்மாக்கள் வர வேண்டுமா? அவர்களை எப்படி கொண்டு வர வேண்டும். அதாவது., மதம் மாற்றுவது எப்படி? என்று இவர் பேசிய காணொளி தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை பதிவு செய்து உள்ளார் மோகன் சி லாசரஸ். கிறிஸ்தவ ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பாடம் படிக்கும் மாணவர்களை எப்படி? அவர் ஏசுவை ஏற்றுக் கொள்ள செய்தார் என்று பெருமையோடு பேசிய காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு, இன்று வரை மக்கள் போராடி வரும் நிலையில், தன்னிடம் படிக்கும் மாணவர்களை மூளை சலவை செய்த கிறிஸ்தவ ஆசிரியர் குறித்து பெருமையோடு பேசிய மதபோதகர் மோகன் சி லாசரஸை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Share it if you like it