மெடிக்கல் மிராக்கிள்…சீமான் கூறிய கதை!

மெடிக்கல் மிராக்கிள்…சீமான் கூறிய கதை!

Share it if you like it

தேள் கடிக்கு சீமான் கூறிய வைத்திய முறை பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்தான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கூறும் கதைகளுக்கு ஆயுசு சில நாட்கள் மட்டுமே என்பதை அனைவரும் நன்கு அறிவர். ’கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்ற பொன்மொழி சீமானுக்கு மட்டுமே பொருந்தும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில், இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசியிருக்கிறார் ;

நாங்க ஆடு, மாடு மேய்க்கும் போது காடுகளில் கிடைகளில் போய் படுப்போம். அப்போ, தேள் கொட்டி விடும். அப்படியே, தேள் ஊர்ந்து வந்து கடித்து விடும். தேள் கொட்டி விட்டது என்று அதிர்ச்சியடைந்தால் அப்படியே விஷம் மெல்ல மெல்ல ஏற ஆரம்பித்து விடும். யாரிடமும் சொல்லாமல் அப்படியே தண்ணீரில் கை வைத்தால் அப்படியே அந்த விஷம் இறங்கி எங்கே கடித்ததோ அங்கே வந்து வலி நின்று விடும். இதனை, வேறுயாரும் அனுபவித்தது இல்லை நானே அனுபவித்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.

சீமானின் பேச்சை கண்மூடிதனமாக நம்பும் அப்பாவி தம்பி தங்கைகளில் யாரேனும் ஒருவருக்கு தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டி அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் சீமானின் வைத்திய முறையை நம்பி ஆற்று நீரிலோ அல்லது குளத்து நீரிலோ கை வைத்து காத்து கொண்டு இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it