போதிதர்மர் மரபணுவில் வந்தவர் ஸ்டாலின்: காங்., எம்.எல்.ஏ சட்டசபையில் கருத்து!

போதிதர்மர் மரபணுவில் வந்தவர் ஸ்டாலின்: காங்., எம்.எல்.ஏ சட்டசபையில் கருத்து!

Share it if you like it

சட்டமன்றத்தை கேலி கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ செல்வ பெருந்தகையை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்கி வரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை..! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது, என்று சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மக்கள் பிரச்சனையை குறித்து பேசாமல் சட்ட சபையில் உதயநிதியை புகழ்ந்து பேசி இருந்தார்.

அதே போல, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பிரச்சார பீரங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது ஒரு சமூக தொண்டு என்று பேசி இருந்தார். இப்படியாக, தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சேப்பாக்க எம்.எல்.ஏ உதயநிதியை புகழ்வதும், தமிழக முதல்வரை பாராட்டுவதுமாக தங்களது பொன்னா நேரத்தை வீணடித்து வருகின்றனர். மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய சட்டசபையில், சன் குடும்பத்தை புகழ்வதிலேயே பாதி நேரத்தை தி.மு.க.வினர் வீணடித்து வருவதாக பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான செல்வ பெருந்தகை முதல்வர் தலைவர் போதி தர்மாவின் மரபணுவின் வழியில் வந்தவர் என்று பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. .பசும்பொன், காமராஜர், கக்கன் போன்றவர்கள் அலங்கரித்த சட்டசபை இன்று தி.மு.க.வின் துதிபாடும் மன்றமாக மாறி விட்டது என நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it