அடிமட்டத்திலிருந்து பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது அலறிய செந்தில்..!

அடிமட்டத்திலிருந்து பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது அலறிய செந்தில்..!

Share it if you like it

பிரபல ஊடக நெறியாளர் செந்தில் அவர்கள் தமிழ் கேள்வி என்னும் YouTube நடத்தி கொண்டே, முரசு போன்ற சில முன்னணி ஊடகங்களில் நெறியாளராகவும் செயல்பட்டு கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தே. தி.மு.க ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள், கடலூர் எம்பி-யின் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டுகள், பா.ஜ.க நிர்வாகி மீது திருநெல்வேலி எம்பி நிகழ்த்திய கொலை வெறி தாக்குதல் மற்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் சட்டம் ஒழுங்கு குறித்து எல்லாம் பேசாமல். பா.ஜ.க, மோடி, அரசு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்வது என இவர் தொடர்ந்து விவாதங்களை இன்று வரை தனது இணையதள ஊடகத்தில் நடத்தி வரும் நபர் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க 381 இடங்களில் அமோக வெற்றி பெற்று இருந்தது. நாளுக்கு நாள் தமிழகத்தில் பா.ஜ.க அண்ணாமலை தலைமையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில். நெறியாளர் செந்தில் அவர்கள் பா.ஜ.க வளர்ச்சி குறித்து அலறிய காணொலிக்கு நெட்டிசன்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it