கறுப்பர் கூட்டத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த தமிழக முதல்வர்..!

கறுப்பர் கூட்டத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த தமிழக முதல்வர்..!

Share it if you like it

தமிழகம்  இன்றும், என்றும், ஆன்மீக மண் என்பதை தமிழக முதல்வர் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்..

உலக கடவுள் முருக பெருமான் குறித்தும், கந்த சஷ்டி கவசம் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்தது கறுப்பர் கூட்டம்… இதன் பின்னால் யார் இருந்தார்கள் என்பதை அறிவார்ந்த தமிழ் சமூகம் அறியும்…

ஹிந்து கடவுள் என்பதால் வழக்கம் போல தி.மு.க மற்றும் சில்லறை கட்சிகள், காசு ஊடகங்கள், சீமான் போன்ற பிரிவினை கட்சிகள் வெற்று அறிக்கையை மட்டும் வழங்கி விட்டு நீண்ட மெளனம் காத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே..

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கி இது என்றும் ஆன்மீக மண் ஈ.வெ.ரா மண் அல்ல என்பதை நிருபித்து இருந்தார் தமிழக முதல்வர்.

ஆக. 25-ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருப்பதன் மூலம் இது ஆன்மீக மண் என்பதை நிலையாட்டியுள்ளார் என்பதை அறிந்த கொள்ள முடியும் என்பது நிதர்சனம்…

தி.மு.க-வின் கறுப்பர் கூட்டத்திற்கு தமிழக அரசு அடிமேல் அடி கொடுத்து வருகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it