வடமாநில தொழிலாளர்களுக்கு ஊக்கம் தந்த எஸ்.பி.!

வடமாநில தொழிலாளர்களுக்கு ஊக்கம் தந்த எஸ்.பி.!

Share it if you like it

வடமாநில தொழிலாளர்களிடம் ஹிந்தியில் பேசி நம்பிக்கை அளித்த மாவட்ட எஸ்.பி.க்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பணி புரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஹிந்தியில் பேசி ஆறுதல் கூறினார். மேலும், இது வெறும் வதந்தி எனவும், உங்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை அளிக்கும் என நம்பிக்கை அளித்துள்ளார்.


Share it if you like it