நுபுர் ஷர்மாவிற்கு தண்டனை என்றால்… சிவலிங்கத்தை இழிவுப்படுத்தியவருக்கு? – பேரரசு காட்டம்!

நுபுர் ஷர்மாவிற்கு தண்டனை என்றால்… சிவலிங்கத்தை இழிவுப்படுத்தியவருக்கு? – பேரரசு காட்டம்!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு நுபுர் ஷர்மாவிற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் அவரை பேச தூண்டியவருக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் அண்மையில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில், இஸ்லாமிய பெரியவர் ரெஹ்மானியும் பங்கேற்றார். அந்தவகையில், இவர் பேசும் பொழுது கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வழிபடும் சிவலிங்கத்தை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதன்காரணமாக, கடும் கோவமடைந்த நுபுர் சர்மா, குரானில் இருக்கும் உண்மை சம்பவத்தை மேற்கோள்காட்டி கேள்வி எழுப்பி இருந்தார். இதுதான், அந்நிகழ்ச்சியில் நடந்த உண்மை சம்பவம் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இதனிடையே, நுபுர் சர்மாவின் கருத்தை பட்டி டிங்கரிங் செய்து உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பரப்பி விட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, பல இஸ்லாமிய நாடுகள் இந்தியா உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தன.

அந்தவகையில், நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ், “இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள், இந்திய அரசியல்வாதி நுபுர் ஷர்மாவின் கருத்தை கேட்டு கொதித்து போய் இருப்பது அபத்தமாக உள்ளது. நுபுர் ஷர்மா உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். முகமது நபி ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து, 9 வயதில் அவருடன் முதல் உறவை மேற்கொண்டார். இதற்கு, இந்தியா ஏன்? மன்னிப்புக் கேட்க வேண்டும் என காட்டமான முறையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு, நுபுர் ஷர்மா அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்களேயானால், அவரை அப்படி பேசத்தூண்டியவருக்கும், சிவலிங்கத்தை கேவலமாக பேசிய அந்த நபருக்கும் அதே தண்டனையை குடுக்க வேண்டும். இவர் மன்னிப்பு கேட்டால் அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

குரானில் இருப்பதை மேற்கோள் காட்டி பேசிய நுபுர் ஷர்மாவிற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் உண்மைக்கு புறம்பாக சிவலிங்கத்தை இழிவுப்படுத்திய இஸ்லாமியருக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it