முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம்: ஹிந்து தலித் இளைஞர் ஆணவப் படுகொலை!

முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம்: ஹிந்து தலித் இளைஞர் ஆணவப் படுகொலை!

Share it if you like it

ஹைதராபாத்தில் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த ஹிந்து பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் நேற்று இரவு ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்து, அப்பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.

ஹைதராபாத் மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் சரூர்நகர் பகுதி பில்லாபுரம் ஏரியாவைச் சேர்ந்தவர் நாகராஜு. 25 வயது ஹிந்து இளைஞரான இவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல கார் கம்பெனியில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது அதே கல்லூரியில் படித்த சையத் அஷ்ரின் சுல்தானா என்கிற இஸ்லாமிய பெண்ணை காதலித்திருக்கிறார். இருவரின் காதலுக்கும் இரு தரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், இருவரும் கடந்த ஜனவரி மாதம் பழைய நகரத்திலுள்ள ஆரிய சமாஜ் மந்திரில் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு, ஹிந்துவாக மாறிய சையத் அஷ்ரின் சுல்தானா, தனது பெயரையும் பல்லவி என்று மாற்றிக் கொண்டார். அதேசமயம், நாகராஜு பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சுல்தானா குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். எனவே, நாகராஜுவை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

இந்த சூழலில், நேற்று இரவு நாகராஜும், சுல்தானாவும் பைக்கில் சென்றிருக்கிறார்கள். அப்போது, அவர்களை வழிமறித்த கும்பல், சுல்தானாவின் கண் எதிரிலேயே கணவர் நாகராஜுவை இரும்பு ராடால் தலையில் அடித்ததோடு, கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். தனது சகோதரர்களும், மைத்துனர்களும், உறவினர்களும் இக்கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக சுல்தானா கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில் எல்.பி.நகர் காவல் உதவி ஆணையர் ஸ்ரீதர் ரெட்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார். மேலும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, நாகராஜின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இது ஒருபுறம் இருக்க, இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்திருக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெலங்கான மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் லவ் ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள்தான் ஹிந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவர்களை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார்கள் இருந்து வருகின்றன. சமீபத்தில்கூட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹிந்து பெண்ணை திருமணம் செய்து, வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்த கொடூரம் அரங்கேறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து போலீஸில் புகார் கொடுத்ததால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அதேபோல, கர்நாடக மாநிலத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியான பிராமணப் பெண்ணை, ஏற்கெனவே திருமணமான ஆட்டோ டிரைவரான இஸ்லாமிய வாலிபர் லவ் ஜிகாத் காதலில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டார். பின்னர், தனது முதல் திருமணம் அம்பலமானவே அப்பெண் கோவிந்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சொல்லவே, அப்பெண்ணை 23 இடங்களில் கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூர செயல் அரங்கேறியது. தற்போது, இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததற்காக ஹிந்து இளைஞரை ஆணவக் கொலை செய்திருக்கிறது இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்.


Share it if you like it