சி.பி.ஆர். கொடுத்து உயிரை காத்த காவலர்!

சி.பி.ஆர். கொடுத்து உயிரை காத்த காவலர்!

Share it if you like it

மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கிய ஒருவரின் உயிரை போக்குவரத்து காவலர் ராஜசேகர் காப்பாற்றி இருக்கிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திர நகர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், பணியில் இருந்த சமயத்தில், சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து, ராஜசேகர் அந்த நபருக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து, போக்குவரத்து காவலரை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். அந்த வகையில், ராஜசேகரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it