தேசிய நெடுஞ்சாலைக்கான செலவீனம் குறித்து மத்திய தணிக்கை குழு (சிஏஜி) சுட்டிக்காட்டியிருந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டிருப்பது ஊழல் இல்லை என தெரிவித்துள்ள அவர் திமுக ஆட்சியிலும் இதுபோன்ற அறிக்கை வெளியானதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் திமுக ஆட்சியில் பேரூராட்சி, நகராட்சிகளில் நடைபெறும் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ள இபிஎஸ் அதிமுக மூன்றாக உடைந்ததாக கூறியவருக்கெல்லாம் மதுரை மாநாடு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரிவித்துள்ளார்.