கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர் !

கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர் !

Share it if you like it

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நூறு வயது கடந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சென்றுள்ளார். அப்போது தான் பெற்றெடுத்த மகன் மற்றும் மகள்களால் கைவிடப்பட்ட தாய்மார்கள் அவர்களின் துயரங்களை மறந்து நடனமாடியுள்ளனர். இதனை பார்த்து ரசித்த மாவட்ட ஆட்சியர் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியரை அருகில் சென்று ஆறுதல் கூறி அரவணைத்துள்ளனர் அங்குள்ள தாய்குலத்தினர். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Share it if you like it