சென்னை மணலியைச் சேர்ந்த சுபாஷ், பெரவள்ளூர், காகித ஆலைகள் சாலையில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுக்கடையில் சுதாகர் ரெட்டி என்பவருக்கு சொந்தமான மதுபான கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி, மூடப்பட்டிருந்த மதுக்கூடத்தை, 68-வது கொளத்துார் தொகுதி தி.மு.க. வட்ட செயலாளர் ஆதவமணி மற்றும் கட்சியினர், சேதப்படுத்தி தாக்கி ‘சிசிடிவி’ கேமராக்களை நொறுக்கி, முக்கிய ஆவணங்களை எடுத்து சென்று உள்ளனர்’ …
மேலும், ‘மாதம் 50,000 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டுகிறார். இல்லையென்றால் மதுக்கூடத்தை தானே நடத்துவதாக கூறுகிறார். இதனிடையே மதுக்கூட உரிமையாளர் மீது தி.மு.க., வட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகார் இருதரப்பு புகார் குறித்தும், பெரவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
…