நியூஸ் கிளிக் விவகாரம் – ஊடக போர்வையில் தேச விரோதிகள் – இஸ்ரேலிய பாணியில் களம் இறங்குவதே நிரந்தர தீர்வு

நியூஸ் கிளிக் விவகாரம் – ஊடக போர்வையில் தேச விரோதிகள் – இஸ்ரேலிய பாணியில் களம் இறங்குவதே நிரந்தர தீர்வு

Share it if you like it

தேச பாதுகாப்பு விஷயங்களில் இஸ்ரேலின் கடுமையான நடவடிக்கைகளை மேம்போக்காக பேசுபவர்களுக்கு ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெரிப்பதாக தெரியலாம். ‌ஆனால் ஒரு தேசத்தின் பாதுகாப்பு தேசிய இறையாண்மை என்பது அந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது . தேசத்தின் தன்மானம் சார்ந்தது. அந்த தேசத்தின் உள்ளும் புறமும் பாதுகாக்கும் அரண் சார்ந்த விஷயம். இந்த விஷயங்களில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற கடுமையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தான் சுற்றிலும் பகை நாடுகளுக்கும் மத்தியில் இருந்தாலும் இன்றளவும் இஸ்ரேலை வல்லரசாக பாதுகாப்பு கேந்திரமாக நீடிக்க முடிகிறது.

சமீப காலமாக பொதுவெளியில் சமூக ஊடகங்கள் ஊடகங்கள் வாயிலாக தேச விரோத கருத்துக்களை பெருமளவில் விதைக்கப்படுகிறது . ஊடக வாதிகள் என்ற போர்வையில் இருக்கும் பலரும் தங்களின் சுய ஆதாயம் சுய விருப்பு வெறுப்பு அடிப்படையில் கட்சி அரசியல் சார்ந்து ஆதரவு எதிர்ப்பு கருத்துக்களை பதிவிடுவது சகஜமாக இருந்தது . அது ஒரு கட்டத்தில் அந்நிய சித்தாந்தம் அந்நிய மத சார்பு என்ற ரீதியில் தேசத்தில் பிரிவினை மத பயங்கரவாத ஆதரவு கருத்தியலாக உருமாறியது .ஆனால் சமீப காலமாக அப்பட்டமாக தேசத்தின் பகை நாடுகள் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் அந்நிய சதிகளை எல்லாம் வெளிப்படையாக ஆதரிக்கும் மனோபாவம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தேசவிரோத கையாளுகையில் பாரதம் இஸ்ரேலிய பாணியை பின்பற்றி உள்நாட்டு துரோகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் பரவலாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

சுற்றிலும் பகை நாடுகள் நடுவில் இஸ்ரேல் இன்னும் ஒரு குட்டி தேசம் இருப்பதை நாம் அறிவோம். எந்நேரமும் போர் பதற்றமும் உள்நாட்டு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்தாலும் அந்த நாடு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் உள்நாட்டு பாதுகாப்பிலும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உளவுப் பணி ஒருங்கிணைப்பிலும் உலகில் அசைக்க முடியாத வல்லரசாக வலம் வருகிறது. அதன் காரணம் உள்நாட்டு பாதுகாப்பு தேச பாதுகாப்பு என்று வரும்போது ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்பதையெல்லாம் அரசு புறந்தள்ளி இரும்பு கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதால்தான் இன்று அவர்களின் பாதுகாப்பு சாத்தியமானது.

இஸ்ரேலிய எதிர்ப்பு பாலஸ்தீன பயங்கரவாதம் அந்த பாலஸ்தீன பயங்கரவாதத்தை ஆதரித்து கருத்தியல் உருவாக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீன பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் கருத்தியலை பரப்பி வந்தது . இது அவர்களின் மத சார்பு அல்லது சகோதரத்துவ நாடுகளின் மீதான ஆதரவு மனோபாவம் என்று இஸ்ரேல் அமைதியாக கடந்து போனது . அதே நேரத்தில் தனது தேசத்தின் பாதுகாப்பு அதன் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கண்காணிப்பையும் உளவு ஒருங்கிணைப்பையும் முன்னெடுத்துக் கொண்டது. ஆனால் ஒரு வரம்பை மீறி ஊடகம் என்ற போர்வையில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான சதிகள் அந்த சதிகளை ஒருங்கிணைக்கும் உலவும் பின்னணி என்று அனைத்திற்குமான ஒரு அதிகாரப்பூர்வ தளமாக அந்த தொலைக்காட்சி அலுவலகமும் அதன் ஊழியர்களும் செயல்பட தொடங்கினார்கள்.

அரபு நாடுகள் முழுவதிலும் பல்வேறு கிளைகளையும் அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் முழு ஆதரவையும் பெற்றிருந்த அந்த தனியார் செய்தி ஊடக தொலைக்காட்சி ஒரு கட்டத்திற்கு பிறகு இஸ்ரேலிய நாட்டிற்கு பாதுகாப்பிற்கும் இஸ்ரேலிய உளவுத்துறைக்கும் சவாலான ஒரு சர்வதேச சதி மையமாகவே செயல்பட தொடங்கியது. இதை சரியான காலத்தில் அடையாளம் கண்டு கொண்ட இஸ்ரேலிய உளவுத்துறை நல்வாய்ப்புக்காக காத்திருந்தது. இஸ்ரேலியன் நாட்டின் உள்ளே நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் அதை எடுத்து இஸ்ரேல் முன்னெடுத்த பதில் தாக்குதல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இஸ்ரேலின் மீது ஒரு வெளிப்படையான வன்மக்கருத்தை அந்த தொலைக்காட்சி நிறுவனம் விவாதம் என்ற பெயரில் முன்னெடுத்தது. காத்திருந்த தருணம் கைகூடி வந்ததாக எண்ணிய இஸ்ரேல் அந்தத் தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்தை தாக்குதல் நடத்தி ஒரே இரவில் தரைமட்டம் ஆக்கிவிட்டது . மேலும் தனது தேசத்தின் பாதுகாப்பு இறையாமை சார்ந்த விஷயங்களில் அத்து மீறினால் இது போன்ற நடவடிக்கைகள் இனி தொடரும் என்று வெளிப்படையாக எச்சரிக்கையும் கொடுத்தது.

அதுவரையில் அந்த தொலைக்காட்சிக்கு முழுமையான ஆதரவும் தளமும் கொடுத்து வந்த நாடுகள் கூட இந்த விவகாரத்தில் அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. இஸ்ரேலை கண்டிக்கவும் அல்லது இஸ்ரேலுக்கு எதிராக ஒருமித்த கருத்துகளையோ உருவாக்கவில்லை. மாறாக இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு என்ன நேர்ந்ததோ ? அதே தான் நமக்கும் என்ற அச்சத்தில் அனைத்து நாடுகளும் கனத்த மவுனம் காத்தது. அதன் விளைவு அந்த தொலைக்காட்சி நிறுவனமும் அது சார்ந்த ஊடகத் தளமும் அதன் பிறகு இஸ்ரேலிய தேசத்தின் இறையாண்மை தேசத்தின் பாதுகாப்பு அவர்களின் உள்நாட்டு முடிவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விவாதிப்பதும் அல்லது சம்பந்தமான விஷம கருத்துக்களை பரப்புவதையோ நிறுத்திக் கொண்டது. இன்று வரை இஸ்ரேலியன் நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எத்தனையோ கருத்துக்கள் விவாதங்கள் நடப்பதற்கு அனுமதி உண்டு. ஆனால் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேசத்திற்கு எதிரானதோ தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலோ கருத்துக்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. அதன் தண்டனைகள் கடுமையாக இருக்கும். தேசத்திற்கு எதிராக வன்மமான கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்த ஒரு தொலைக்காட்சி நடிகையை அவரது முழங்காலில் சுட்டு கைது செய்த செய்தி உலகம் முழுவதும் பேசும் பொருளானது.

இந்தியாவின் நெருங்கிய நாடு இந்தியா இஸ்ரேல் இணக்கமான நட்பு நாடுகள் . அந்த வகையில் உளவுத்துறை ஒருங்கிணைப்பு எல்லை தாண்டிய பயங்கரவாதம் உலகளாவிய தகவல் தொடர்புகள் எல்லாமே இரு நாடுகளுக்கும் இடையே தடை இன்றி சாத்தியமாகும் விஷயங்கள் தான். கடந்த காலங்களில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேர்ந்த காலங்களில் எத்தனையோ விவகாரங்களில் இஸ்ரேல் வலிய வந்து பாரதத்திற்கு உதவி கரம் நீட்டி இருக்கிறது. இந்த பயங்கரவாதம் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமான இழப்புகளில் இந்தியா இஸ்ரேல் இரு நாடுகளுமே ஏராளமான இழப்புகளை துயரங்களை கடந்து வந்தவர்கள் . அந்த வகையில் இரு நாடுகளும் ஒருவரின் ஒருவர் வலியையும் இழப்புக்களையும் மனதாரப் புரிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் இஸ்ரேலிய பாணியில் பாரதமும் உள்நாட்டில் அதிரடியாக களம் இறங்க வேண்டும். ஊடகம் ஊடகவியலாளர்கள் போர்வையில் இருக்கும் அந்நிய சார்பும் உள்நாட்டு துரோகமும் களை எடுக்கப்பட வேண்டும். ‌ கருத்தியல் உருவாக்கம் என்ற பெயரில் தேசத்தின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுப்பதும் அதே நேரத்தில் பகை நாடுகளுக்கு ஆதரவான கருத்துகளை சொந்த நாட்டில் உருவாக்குவதும் எதிர்காலத்தில் தேசத்தின் பேரழிவிற்கே துணை நிற்கும்.

கத்தியின்றி ரத்தம் இன்றி உளவியல் ரீதியான யுத்தமாகவே இந்த கருத்தியல் உருவாக்கத்தை அணுக வேண்டும். அந்த வகையில் உள்நாட்டு மக்களிடம் சொந்த நாட்டு மக்களை அதன் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக திசை திருப்பி அதன் மூலம் தேசவிரோத கருத்துக்களை பரப்பும் இதுபோன்ற விஷமிகள் முளையிலேயே களையப்பட வேண்டும். இவர்களின் கட்டமைப்புகள் ஆதரவு தளங்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். இதில் பாரபட்சம் தயவு தாட்சண்யம் இருக்கக் கூடாது. ஒன்று வாழும் தேசத்தின் சட்ட திட்டங்கள் அதன் இறையாண்மை தேச பாதுகாப்பிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தங்களின் சார்புள்ள தங்களின் ஆதரவு மனநிலையுள்ள தேசத்தின் குடிமக்களாகவே மாறி தன் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இரண்டும் இல்லையேல் பாரத தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பு காரணமாக கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற அச்சம் வந்தால் மட்டுமே பாரத தேசத்தில் உள்நாட்டு தேசதுரோகம் மற்றும் பயங்கரவாதம் முடிவுக்கு வரும். ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் தேசத்திற்கு எதிராகவும் அந்நிய சார்பிலும் கருத்து உருவாக்கம் செய்யும் ஊடக பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.


Share it if you like it