இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் பேசிய சொல்லை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் – முன்னாள் துணை முதல்வர் வேண்டுகோள்..!

இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் பேசிய சொல்லை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் – முன்னாள் துணை முதல்வர் வேண்டுகோள்..!

Share it if you like it

தி.மு.க அரசு தனது தொடர் தோல்விகளை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் அண்மையில் ஜெய்ஹிந்த் சொல்லை அவமதிக்கும் வகையில், தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது நாடு முழுவதும் கடும் அதிர்வலகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு தமிழக முன்னாள் துணை முதல்வர் தனது கருத்தை இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திர சொல்லான ஜெய்ஹிந்த் சொல்லை இழிவுபடுத்தும் வகையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரன் அவர்கள் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

 


Share it if you like it