ரூ.1 கோடி மின்கம்பி திருட்டு: தி.மு.க. பிரமுகர் கைது!

ரூ.1 கோடி மின்கம்பி திருட்டு: தி.மு.க. பிரமுகர் கைது!

Share it if you like it

திருவள்ளூர் அருகே 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்கம்பிகளை திருடியதாக தி.மு.க. பிரமுகர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழானூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, அப்பகுதியில் ஏராளமான மின்கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான மின்கம்பிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், மின் கம்பிகளை திருடிய தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் அலெக்ஸ் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it