தி.மு.க. ஆட்சியில் கரன்ட் கட் தெரியும்… கரன்ட் திருட்டு தெரியுமா?

தி.மு.க. ஆட்சியில் கரன்ட் கட் தெரியும்… கரன்ட் திருட்டு தெரியுமா?

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் பொதுவாக கரன்ட் கட்டாவதுதான் வழக்கம். ஆனால், கரன்ட் திருட்டில் ஈடுபட்டு அசிங்கப்பட்டிருக்கிறார் தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூர் தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஜோதிகுமார். பள்ளிப்பட்டு பேரூராட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது வீடு பஜார் ரோட்டில் அமைந்திருக்கிறது. இவர், தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை, அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு எடுத்து பயன்படுத்தி வந்திருக்கிறார். இதுகுறித்து யாரோ மின்சார வாரிய அலுவலகத்துக்கு புகார் அனுப்ப, அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜோதிகுமார் கடந்த சில மாதங்களாவே மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடியது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கேட்டதற்கு, தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் செல்வம் என்பவர்தான் மின் திருட்டில் ஈடுபட்டதாக மடைமாற்றி இருக்கிறார். ஆனால், இதை அதிகாரிகள் நம்பவில்லை. பின்னர், எவ்வளவு மின்சாரம் திருடப்பட்டிருக்கிறது என்பதை கணக்கெடுத்த அதிகாரிகள், 53,000 ரூபாய் அபராதம் விதித்தனர். எப்புடி எப்புடியெல்லாம் ஏமாத்துறானுங்க பாருங்க…


Share it if you like it