6 மாசத்துக்குள்ள ஏதாவது நடக்கும்… மோகன்.சி.லாசரஸ் உதவியாளர் சாபம்!

6 மாசத்துக்குள்ள ஏதாவது நடக்கும்… மோகன்.சி.லாசரஸ் உதவியாளர் சாபம்!

Share it if you like it

மோகன் சி லாசரஸ் குறித்து செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிருபருக்கு, 6 மாசத்துக்குள்ள அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் பாருங்க என்று லாசரஸ் உதவியாளர் சாபம் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்தவர் மோகன் சி லாசரஸ். கிறிஸ்தவ மத போதகரான இவர், இயேசு விடுவிக்கிறார் என்கிற சபையை நடத்தி வருகிறார். இவர், அற்புத சுகமளிப்பதாகக் கூறி, அப்பகுதி மக்களை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. காரணம், இவர் சொன்னது எதுவுமே நடந்ததில்லை. அதோடு, சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கொடுக்கும் காணிக்கையை பொறுத்தே கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்றும், நிறைய காணிக்கை கொடுத்தால்தான் அதிக ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் சபையிலேயே வெளிப்படையாகக் கூறி பணம் வசூலித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதேபோல, ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மதத் தலைவர்களையும் கடுமையாக விமர்சிப்பார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி பிரதமராகக் கூடாது என்று சிறப்பு ஜெபக்கூடத்தை நடத்தினார். தவிர, இந்தியாவிலேயே அதிகளவில் தமிழகத்தில் சாத்தானின் கூடாரங்கள் இருப்பதாக கோயில்களை குறிப்பிட்டு இவர் பேசியது பெரும் விவாதப் பொருளானது. இதற்காக அவர் மன்னிப்புக் கேட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த சூழலில், சமீபத்தில் நடந்த ஜெபக் கூட்டத்தில் பேசிய மோகன் சி லாசரஸ், மற்ற மதங்கள் எல்லாம் பாவங்களின் புகழிடம் என்றும், ஆகவே, அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் மனம் திருந்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, மோகன் சி லாசரஸ் குறித்தும், அவர் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாரிக்கிறார் என்பது குறித்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் சி லாசரஸ், தனது உதவியாளர் ஜேக்கப் மூலம் மிரட்டல் விடுத்ததோடு, செய்தி வெளியிட்ட நிருபர் குடும்பத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடக்கும் என்றும் சாபம் விட்டிருக்கிறார். இதை அந்த நிருபர் ரெக்கார்டு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த ஆடியோதான் தற்போது வைரலாகி, மோகன் சி லாசரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.


Share it if you like it