துப்பாக்கியை காட்டி மிரட்டல்: மாஜி ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ கைது!

துப்பாக்கியை காட்டி மிரட்டல்: மாஜி ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ கைது!

Share it if you like it

ஆட்டின் மீது டூவீலரை ஏற்றியதை தட்டிக் கேட்ட பொதுமக்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மாஜி ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கே.உடையாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ, ஆட்டின் மீது மோதிவிட்டார். இதில், ஆட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஆட்டின் உரிமையாளர் ராஜ்குமார் தட்டிக் கேட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஜான் பிரிட்டோ வீட்டிற்குச் சென்று, துப்பாக்கியை எடுத்து வந்து, ராஜ்குமார் உள்ளிட்ட அவருக்கு ஆதரவாக வந்த மக்களையும் மிரட்டி இருக்கிறார்.

இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையித்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், ஜான் பிரிட்டோவை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த துப்பாக்கியையும், 2 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். ஜான் பிரிட்டோ துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…


Share it if you like it