லவ்ஜிகாத்… கூட்டு பாலியல்… மதமாற்றம்!

லவ்ஜிகாத்… கூட்டு பாலியல்… மதமாற்றம்!

Share it if you like it

இளம்பெண்ணை லவ்ஜிகாத் என்கிற பெயரில் காதல் வலையில் வீழ்த்தி, பிறகு அவரை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இறுதியாக மதமாற்றம் செய்ய வற்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் லதா மோத்தல். (பெயர் மாற்றம்) 23 வயதான இளம்பெண்ணான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஜாவித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த சூழலில், கடந்த ஜூன் 14-ம் தேதி லதாவை மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் ஜாவித். அங்கு தனது நண்பன் ஒருவனுக்குச் சொந்தமான வீட்டில் ஒரு அறையில் லதாவை அடைத்து வைத்திருக்கிறான்.

பின்னர், லதாவை தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இதன் பிறகு, மூவரும் சேர்ந்து லதாவை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்திருக்கிறார்கள். மேலும், லதாவை இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொண்டிருக்கிறான் ஜாவித். இறுதியில், கடந்த 23-ம் தேதி காலனிகஞ்ச் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் லதாவை இறக்கிவிட்டு விட்டு ஜாவித் தப்பிச் சென்று விட்டான். மேலும், லவ்ஜிகாத், கூட்டு பாலியல், மதமாற்றம், திருமணம் ஆகியவை குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறான்.

எனினும், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார் லதா மோத்தல். இதையடுத்து, தனது மகளை கடத்திச் சென்று, கட்டாய மதமாற்றம் செய்ததோடு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக லதாவின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். இதன் பேரில் ஜாவித் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து, இந்தியாவில் லவ்ஜிகாத் பெயரில் நடைபெறும் இதுபோன்ற நாடக காதல் குறித்து ஹிந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.


Share it if you like it