ஹிந்துக்கள் வேடமிட்டு அராஜகம்: அம்ஜத், கலீம் உட்பட 6 பேர் கைது!

ஹிந்துக்கள் வேடமிட்டு அராஜகம்: அம்ஜத், கலீம் உட்பட 6 பேர் கைது!

Share it if you like it

ஹிந்துக்கள் போல காவி உடையணிந்து அராஜகத்தில் ஈடுபட்ட அம்ஜத், கலீம், சுபன் அலி உட்பட 6 முஸ்லீம் இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஹிந்துக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், இஸ்லாமியர்கள் சில சந்தர்ப்பங்களில் ஹிந்துக்களைப் போல காவி துண்டை போட்டுக்கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. உதாரணமாக, டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ. போராட்டத்தின்போது, இஸ்லாமியர்கள் பலரும் காவி துண்டைப் போட்டுக்கொண்டு, போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால்தான், கலவரம் வெடித்தது. ஆனால், ஹிந்துக்கள் திட்டமிட்டு கலவரத்தை தூண்டியதுபோல சித்தரித்து விட்டார்கள். விசாரணையின்போதுதான், இஸ்லாமியர்கள் ஹிந்துக்கள் போல வேடமிட்டு நாசவேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல, தற்போது காவி உடையணிந்து ஹிந்து துறவிகளைப் போல வலம்வந்து அராஜகத்தில் ஈடுபட்ட 6 இஸ்லாமிய இளைஞர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

அதாவது, உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகமது கலீம், அம்ஜத் கான், நவாப் அலி, சுபன் அலி, அகமது மியான் மற்றும் ரஷித் கான். பீகார் மாநிலத்துக்குச் சென்ற இவர்கள், காவி உடையணிந்து ஹிந்து துறவிகளைப் போல தங்களை காட்டிக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் நடை, உடை, பாவணையில் அப்பகுதி ஹிந்து இளைஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அக்பர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சத்தர் ஹால்ட் அருகே, மேற்கண்ட 6 பேரையும் ஹிந்து இளைஞர்கள் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது, 6 பேரும் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 6 பேருக்கும் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மேற்கண்ட 6 பேரும் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு கத்தியையும் போலீஸார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, போலீஸார் 6 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும், மேற்கண்ட 6 பேரும் என்ன வேலை செய்கிறார்கள், இவரது பெற்றோர் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை கோண்டா போலீஸாரை தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள். மேலும், ஏதேனும் சதிச் செயலில் ஈடுபடுவதற்காக ஹிந்து துறவிகளைப்போல வேடமிட்டு சுற்றித் திரிந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.

இஸ்லாமிய இளைஞர்கள் காவி உடையணிந்து ஹிந்து துறவிகளைபோல வேடமிட்டுத் திரிந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it