ஆர்.எஸ்.எஸ். செயற்குழு நாளை தொடக்கம்!

ஆர்.எஸ்.எஸ். செயற்குழு நாளை தொடக்கம்!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்திய செயற்குழு கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்திய செயற்குழு கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அக்டோபர் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மொத்தமுள்ள 45 பிராந்தியங்களைச் சேர்ந்த மாநிலத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் மாநில முழு நேர ஊழியர்கள், மாநில இணை முழு நேர ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே மற்றும் அகில இந்திய இணை பொதுச் செயலாளர்கள் மற்றும் தேசிய அளவிலான பிற நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில், நிகழாண்டு மார்ச் மாதம் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் உருவாக்கப்பட்ட வருடாந்திர வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும், நிறுவன பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும், நாட்டின் முக்கியமான சமகால முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இவற்றுடன், அகில இந்திய தலைவரின் விஜயதசமி உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பிரச்னைகளை பின்தொடர்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it