உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச சிறுபான்மை ஆணையம் சட்டவிரோதமாக இருக்க கூடிய 5000 மதராஸாகளை மூடியுள்ளது. சட்டவிரோத மதராஸாக்களை மூடுவதன் மூலம் அரசாங்கம் 100 கோடிக்கு மேல் சேமிக்கும் என்றும் முதல்வர் யோகி கூறியுள்ளார். மேலும் சேமிக்கும் பணத்தை ஜெயின் மற்றும் சீக்கிய சமூக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.