வன்னியரசு கருத்தால் பரபரப்பு – மீண்டும் மக்கள் நல கூட்டணியா..? 

வன்னியரசு கருத்தால் பரபரப்பு – மீண்டும் மக்கள் நல கூட்டணியா..? 

Share it if you like it

அ.தி.மு.க கூட்டணியில் நிலவும் குழப்பத்தை வைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெறும் என்று ஸ்டாலின் எண்ணி இருந்த நிலையில்.

ம.தி.மு.க, மற்றும் அபுபக்கர் தலைமையிலான கட்சி தனி சின்னத்தில் தான் நிற்போம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்., என்று வெளிப்படையாக கருத்து கூறி தி.மு.க-விற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில் வி.சி.க மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு. எடப்பாடி தமிழக முதல்வர் ஆகும் பொழுது. திருமாவளவன் முதல்வர் ஆக முடியாதா? என்று கேள்வி எழுப்பி இருப்பது. திருமாவளவனின் குரலாக வன்னியரசு ஒலித்துள்ளார்.

மேலும் பல எதிர்பாராத திருப்பங்கள் தேர்தல் நெருங்க, நெருங்க தமிழகத்தில் நிகழும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it