சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் VanniyarsBoycottRajinikanth

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் VanniyarsBoycottRajinikanth

Share it if you like it

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா மற்றும் மணிகண்டன் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இதில் இருளர் சமூகத்தை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் தினந்தோறும் படுகின்ற அவலங்களை மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் ஞானவேல் ராஜா. இந்நிலையில் இருளர் சமூகத்தை சேர்ந்த மணிகண்டனை, உயர் சாதியில் இருக்கும் காவல்துறை அதிகாரி அடித்து கொடூரமாக துன்புறுத்துவார். மிக கொடூரமாக சித்தரித்திருக்கும் அந்த காவல்துறை அதிகாரி வீட்டில் வன்னியர் சமூகத்தில் உயர்வாக கருதப்படும் அக்னிகலசம் புகைப்படம் கொண்ட நாட்காட்டியை மாட்டியிருப்பர். இதனால் ஆத்திரம் அடைந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்த உடனே அந்த நாட்காட்டி மாற்றப்பட்டது. இருப்பினும் இயக்குனர் ஞானவேல் எந்த மன்னிப்பும் கேட்காததால் வன்னியர் சமூக மக்கள் கோபத்துடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அடுத்து ஜெய்பீம் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில் நடிக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஞானவேல் ராஜா மேல் இருக்கும் கோபத்தை தற்போது ரஜினிகாந்தின் மேல் காட்டி சமூக வளைத்தளத்தில் #VanniyarsBoycottRajinikanth இவ்வாறு பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.


Share it if you like it