தே.மு.தி.க தலைவரின் கால் விரல் அகற்றம்!

தே.மு.தி.க தலைவரின் கால் விரல் அகற்றம்!

Share it if you like it

தே.மு.தி.க தலைவரின் கால் விரல் அகற்றம் செய்யப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர், தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். தனது திரைப்படங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இவரின், புரட்சிகரமான வசனங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது. மேலும், சமுதாயத்தில் நிலவும் அவலங்களை தனது திரைப்படங்கள் மூலம் சுட்டிக்காட்டி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர். இப்படியாக, கேப்டன் விஜயகாந்த் பற்றி கூறிக் கொண்டே செல்லலாம் அந்த அளவிற்கு தமிழக மக்களின் அன்பையும் ஆதரவினையும் பெற்றவர்.

இப்படிப்பட்ட மனிதர் உடல் நலம் குன்றி கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்து இருக்கிறார். இந்நிலையில், நீரிழிவு பிரச்சனையால் கடும் அவதியடைந்து வந்த இருக்கிறார் கேப்டன். அந்தவகையில், அவரின் வலது காலில் இருந்து மூன்று விரல்களை மருத்துவர்கள் அகற்றி இருப்பதாக தற்பொழுது செய்தி வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it