பா.ஜ.க.வினரை கொலை செய்ய வாளி வாளியாக வெடிகுண்டுகள்! மேற்குவங்கத்தில் பயங்கரம்

பா.ஜ.க.வினரை கொலை செய்ய வாளி வாளியாக வெடிகுண்டுகள்! மேற்குவங்கத்தில் பயங்கரம்

Share it if you like it

மேற்குவங்கத்தில் 2 குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்ட பிர்பூம் பகுதியில், வாளி வாளியாக நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் அமைந்திருக்கிறது மார்கிராம். இப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான பஞ்சாயத்துத் துணைத் தலைவர் பாது ஷேக் என்பவர், கடந்த 21-ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.வினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் தீவைத்தனர். இதில், 2 குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் உடல் கருகி இறந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இச்சம்பவம்.

ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ, இது ஒன்றும் புதிதல்ல, பீகார் மத்தியப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று பொறுப்பில்லாமல் பதிலளித்திருந்தார். ஆனால், இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதையடுத்து, கண்துடைப்புக்காக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது போல பாசாங்கு காட்டினார்.

இதனிடையே, இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொல்கத்தா உயர் நீதிமன்றம், 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 26-ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சி.பி.ஐ., 21 பேரை குற்றவாளிகளாக கண்டறிந்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில்தான், சம்பவம் நடந்த மார்கிராம் பகுதியில் 30 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தின் அடியில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அக்கட்டடத்தில் சோதனை மேற்கொண்டபோது, வாளி வாளியாக வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சுமார் 4 வாளிகளில் 40-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் பங்களாதேஷைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லீம்கள் ஏராளமானோர் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய ஓட்டுவங்கிகளாக இருக்கிறார்கள். இவர்கள்தான் இதுபோன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீஸார் கூறுகின்றனர். இவர்களதான் பா.ஜ.க.வினரை கொலை செய்வதற்காக மேற்படி நாட்டு வெடிகுண்டுகளை கட்டடத்தில் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ரோகிங்கியா முஸ்லீம்கள் தனது வாக்கு வங்கியாக இருப்பதால், மம்தா பானர்ஜி கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனினும், தற்போது இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பதால், மம்தா பானர்ஜியின் வேஷம் கலைந்துவிடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். வாய்ப்பு


Share it if you like it